திண்டுக்கல், நவ. 5: ஆத்தூர் காமராஜர் அணைக்கு தண்ணீரை நிரம்ப விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்ட குடகனாறு விழிப்புணர்வு குழுவினர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் விஜயலட்சுமியிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் நிரம்பி வெளியேறும் தண்ணீர் குடகனாறு வழியாக பல லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.