நாகை, நவ.5: நாகையை அடுத்த பனங்குடி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் இல்லை என்றால் அந்த தொழிலாளர் குடும்பத்தை கருணை கொலை செய்ய கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுதனர்.நாகையை அடுத்த பனங்குடியில் செயல்பட்டு வரும் சென்னை எண்ணெய் சுத்தகரிப்பு ஆலையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர் நல சங்கத்தை சேர்ந்த கவுரவத் தலைவர் ரவி, செயலாளர் கண்ணன், தலைவர் முத்துராஜா பனங்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் சுமார் 80க்கும் மேற்பட்டவர்கள் நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் முகாமில் டிஆர்ஓ இந்துமதியிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:நாகை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் அமைந்துள்ள சென்னை எண்ணெய் சுத்தகரிப்பு ஆலையை (சிபிசிஎல்) விரிவாக்கம் செய்திட சிபிசிஎல் நிர்வாகம் முன்வந்துள்ள நிலையில், கடந்த 1.4.2019 முதல் ஆலையின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.