கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி, நவ.1:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இம்மாதம்(நவம்பர்) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. வரும் 5ம் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலத்தில், ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன் தலைமையிலும், 6ம் தேதி காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபாகர் தலைமையிலும், 12ம் தேதி காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி தாலுகா மேல்கரடிகுறி கிராம சமுதாய கூட்டத்தில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி தலைமையிலும் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கையை மனுக்களாக அளித்து பயனடையுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: