குன்னூர், நவ. 1:கன மழை காரணமாக, தீயணைப்பு துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினரின் சீரமைப்பு பணிக்காக நேற்று குன்னூர் வந்தனர். நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்க மற்றும் விழக்கூடிய நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்றவும் கோவை மாவட்டத்தில் இருந்து 60 தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமையில் குன்னூர் வந்தனர். இது குறித்து தீயணைப்பு அதிகாரி பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘‘குன்னூர் வந்துள்ள 60 தீயணைப்பு துறையினரும் பல குழுக்களாக பிரித்து செயல்படுவோம். தீயணைப்பு துறையினரின் 5 வாகனங்கள் மொபைல் வாகனங்களாக செயல்பட்டு வருகிறது.