விழுப்புரம், நவ. 1: தமிழகத்தில் வரும் 6ம் தேதி போலீஸ் வேலைக்கான உடற்தகுதி தேர்வு தொடங்குகிறது. விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் 5,785 பேர் எழுதுகிறார்கள். ஐஜி சமுத்திரக்கனி தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் 2,465 இரண்டாம் நிலை காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 இரண்டாம் நிலை காவலர்கள் (தமிழ்நாடு சிறப்புக்காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் பதவி என 8826 பணியிடங்கள். இது தவிர மற்ற பணியிடங்கள் 62 என மொத்தம் 8888 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 6ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து இதற்கான தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி 32 மாவட்டங்களில் 228 மையங்களில் நடந்தது. சுமார் 3 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 17, 114 ஆண்களும், 3,160 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 20,274 பேர் இத்தேர்வை எழுதினார்கள். எழுத்து தேர்வு முடிவுகள் கடந்தமாதம் வெளியாகின. இதனிடையே எழுத்து தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு தொடர்ந்து அடுத்த கட்டமாக உடல் தகுதி தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு வரும் 6ம் தேதி தமிழகம் முழுவதும் தொடங்குகிறது.