நாங்குநேரி அக்.31: நாங்குநேரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. மழையால் மரம் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாங்குநேரி பகுதியில் கடந்த இரு வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் நாங்குநேரி இசக்கியம்மன் கோவில் பாலத்திலிருந்து ஊருக்குள் செல்லும் முக்கிய சாலையில் நின்ற ஆலமரம் சரிந்து விழுந்தது. இதனால் அந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து நாங்குநேரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர் அதன்பின் போக்குவரத்து சீரானது. அடைமழை காரணமாக பொது மக்கள் எங்கும் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். தொடர் மழையால் பாசன குளங்களுக்கு தண்ணீர் வரத்துவங்கியுள்ளது. விவசாயிகள் நெல் பயிரிடுவதற்காக நாற்றாங்கால் அமைக்கும் பணியினை மேற்கொண்டுள்ளனர்.