கோவை, அக். 31: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ‘அபேட்‘ மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதை மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவை மத்திய மண்டலம், 54-வது வார்டுக்குட்பட்ட ராம்நகர் பகுதியிலுள்ள சரோஜினி வீதியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதையும் துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி பார்வையிட்டார்.இந்த ஆய்வின் போது, மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ்கனகராஜ், மண்டல சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.