உளுந்தூர்பேட்டை, அக். 31: உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், பல்வேறு அத்தியாவசியப் பணிகளுக்கும் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். கிராமப்புறத்தில் இருந்து வருபவர்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் உளுந்தூர்பேட்டைக்கு வந்து செல்லும் நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர், பாலி, ஷேக்உசேன்பேட்டை, எறஞ்சி, திருப்பெயர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய நேரத்தில் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால் அந்த பேருந்துகளில் ஏராளமானவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் நிலை உள்ளது.