விழுப்புரம், அக். 31: விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் பாலாஜி நகர், திருக்குறிப்பு தொண்டர் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீரேணுகாபரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. இதனையொட்டி கடந்த 29ம் தேதி மங்களஇசையுடன் திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு நடந்தது. தொடர்ந்து முதல்கால வேள்வி பூஜையும், கருவறை மற்றும் பரிவார சிலைகளுக்கு கோபுரகலசம் அமைத்தல் நிகழ்ச்சி நடந்தது.