புளியங்குடி, அக்.27: டி.எஸ்.எம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் பள்ளியானது சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற மனவளர்ச்சி குறைந்த மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். தீபாவளி பண்டிகையை அவர்களும் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பு பள்ளியின் தாளாளர் மாரியப்பன் முயற்சி எடுத்து அனைத்து குழந்தைகளுக்கும் புத்தாடைகள்,மற்றும் இனிப்புகளும் வழங்கினார்.