ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஆலங்குளம், அக். 27: திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளை தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். துணை தலைவர் வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பழனி, அனைத்து ஓய்வூதிய சங்க மாநில துணை தலைவர் சுந்தரமூர்த்தி நாயனார், கண்டன உரையாற்றினார். கிளை செயலாளர் அந்தோணி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஆலங்குளம் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: