திண்டிவனம், அக். 25: திண்டிவனத்தில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காத அரசு விரைவு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. திண்டிவனம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் தர் மனைவி விஜயலட்சுமி (55). இவர் கடந்த 2014ம் ஆண்டு வீட்டின் அருகே உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு விரைவு பேருந்து விஜயலட்சுமி மீது மோதியது. இந்த விபத்தில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து விஜயலட்சுமியின் மகள்கள் விபத்து நஷ்ட ஈடு கேட்டு, திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்களுக்கு ரூ.5 லட்சத்து 49 ஆயிரத்து 850 நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்.20ம் தேதி தீர்ப்பு கூறினார்.