நாகை, அக்.25: நாகை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் 13 ம் தேதி வரை ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் பிரவீன் பி நாயர் தெரிவித்துள்ளார். நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் ஜனவரி 3 ம்தேதி முதல் 13ம் தேதி வரை ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் ஆகிய 14 மாவட்ட இளைஞர்களும், பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களும் பங்கேற்கலாம். இளநிலை படை அலுவலர் பணிக்கு வரும் 29ம் தேதி வரையிலும், அவில்தார் வரும் 30ம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.