மின்வாரிய ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள்

விழுப்புரம், அக்.  24:  விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடந்தது.விழுப்புரத்தில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மகளிருக்கான வட்டஅளவிலான விளையாட்டுப்போட்டிகள் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் காளிமுத்து தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் மதனகோபால் முன்னிலை வகித்தார். சுமதி, நிதிகட்டுப்பாட்டு அலுவலர் சாந்தி, கணக்கு அலுவலர் ரீட்டாதமிழ்ச்செல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.

Related Stories: