கெங்கவல்லியில் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை

கெங்கவல்லி, அக். 24: கெங்கவல்லி பேரூராட்சியில்,  மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜ சார்பில் சமூக  விழிப்புணர்வு பாதயாத்திரை நடைபெற்றது. பாஜ சேலம் கிழக்கு மாவட்ட தலைவர்  மாணிக்கம் தலைமை வகித்தார். கெங்கவல்லி பஸ் நிலையத்தில் துவங்கிய பாதயாத்திரை, ஆணையம்பட்டி ஊராட்சியில் நிறைவுபெற்றது. இதில் சுற்றுப்புற தூய்மை, மதுவை  தவித்தல், பெண்கள் முன்னேற்றம், மரம் வளர்த்தல் சமூக ஒற்றுமையை  மேம்படுத்துதல், இயற்கை வேளாண்மை மேற்கொள்ளுதல் பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து  சுற்றுச்சூழலை வளப்படுத்துதல் போன்றவை  வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் இளவரசன்  மற்றும் சுசீலா, ஆனந்தன், பாலசுப்ரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: