தேனி, அக். 23: தேனி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்த ரெட் அலர்ட்படி தேனி மாவட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்யாததால் எந்த பாதிப்பும் இல்லை. மழை பெய்யாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரத்தில் அக்டோபர் 22 மற்றும் 23ம் தேதிகளில் கனமழை பெய்யும் என ரெட் அலாட் விடுக்கப்பட்டது. இதையடுத்து சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.