மஞ்சூர், அக்.23: மஞ்சூர் ஊட்டி சாலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை ெபய்தது. நேற்று கனமழை பெய்யும் என ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், நீலகிரியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் நேற்று மழை பெய்யவில்லை. இதனால், மக்கள் நிம்மதியடைந்தனர். பெய்து வரும் பலத்த மழையில் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டது. குறிப்பாக மஞ்சூர் ஊட்டி சாலையில் குந்தாபாலம், மெரிலேண்ட் மற்றும் எடக்காடு, முக்கிமலை, கேரிங்டன், கிண்ணக்கொரை, கோரகுந்தா சாலைகளில் பெருமளவு மண்சரிவுகள் ஏற்பட்டதுடன் ஏராளமான மரங்கள் விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. குந்தாபாலம் ராமையா பிரிட்ஜ் அருகே பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள், கற்கள் ரோட்டில் உருண்டு விழுந்தன. கிண்ணக்கொரை அருகே ஏற்பட்ட நிலச்சரில் சாலையின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சீரமைப்பு பணிகள் கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது.