நெல்லை, அக். 23: தலைவன்கோட்டை பஞ். முன்னாள் தலைவர் பூசைப்பாண்டியன், கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தலைவன்கோட்டை வண்ணார்தெருவில் மின்கம்பம் பழுதடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்திலேயே டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள அரண்மனை தெருவில் புதிய சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். ஊராட்சி மன்ற அலுவலகத்தை சுற்றி காம்பவுன்ட் சுவர் கட்டித் தர வேண்டும்.