கிருஷ்ணகிரி, அக். 18: கிருஷ்ணகிரி வட்டாரப்பகுதிகளில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள், சிறு தானியங்கள் உற்பத்தி, விளைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி வட்டாரத்தில், தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள், சிறு தானியங்கள் உற்பத்தி, விளைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் பிரசார வாகனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் வேளாண் கல்லூரி பயிற்சி மாணவிகள் கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். இது குறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பச்சையப்பன் கூறியதாவது:ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், நமது அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட பிரச்சார ஊர்தி அமர்த்தப்பட்டுள்ளது. இதை நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்(பொ) சண்முகம்கொடி அசைத்து துவக்கி வைத்தார்.