சுரண்டை, அக். 17: சேர்ந்தமரம் அருகே வேலப்பநாடாரூரில் வடிகால் வசதி இல்லாததால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனை தாசில்தார் பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். கடையநல்லூர் தாலுகா சேர்ந்தமரம் அருகே உள்ளது, வேலப்பநாடாரூர். இந்த கிராமத்தில் சரியான வடிகால் வசதி இல்லையென கூறப்படுகிறது. மேலும் சாக்கடைகளும் முறையாக அள்ளப்படவில்லை. இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கி கடந்த 2 நாட்களாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலப்பநாடாரூரில் கொட்டித் தீர்த்த மழையில் கிராமத்தையே மழைநீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.