பைக் திருடிய 2 பேர் கைது

திருப்பூர், அக். 15:    திருப்பூர் காந்தி நகரை சேர்ந்தவர் முரளி. தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு மீன் வாங்க சென்றபோது பைக்கை மார்க்கெட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு சென்று மீன் வாங்கி வந்து பார்த்தபோது பைக் காணாமல் போனது தெரியவந்தது. திருப்பூர் கே.செட்டிபாளையத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி தலைமை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுகிறார். சில நாட்களுக்கு முன் அவர் மருத்துவமனை பணியாளர் வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்த பைக்கை நிறுத்தி இருந்தார். அந்த பைக் மர்ம நபர்களால் திருடப்பட்டது.

இந்நிலையில், பழைய பஸ் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இவர்கள் கோவை உக்கடத்தை சேர்ந்த செல்வம் (24). மதுரையை சேர்ந்த, கதிரவன் (32) எனவும் இவர்கள் பைக்கை திருடியதும்  தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

Related Stories: