சேலம், அக்.10: சேலம், கிருஷ்ணகிரியில் நாளை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம் நடக்கிறது. சேலம் சொர்ணபுரி எஸ்.ஜெ. பிளாசாவில் செயல்பட்டு வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் மண்டல ஆணையர் ஹிமான்ஷூ குமார் தலைமையிலும், கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனி மேற்கு இணைப்பு சாலையில் உள்ள கிருஷ்ணகிரி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் அமலாக்க அதிகாரி இளங்கோவன் தலைமையிலும், ஈரோடு கருங்குளம், காவிரி சாலையில் உள்ள ஈரோடு வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மண்டல ஆணையாளர் சிசுபாலன் தலைமையிலும் இன்று ‘நிதி ஆப்கே நிகட்’ குறைதீர் கூட்டம் நடக்கிறது.