ஊட்டி, அக். 10: தொடர் மழை காரணமாக ஊட்டி ரோஜா பூங்காவில் பூக்கள் உதிர்ந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். ஊட்டியில் செப்டம்பர், அக்ேடாபர் மாதங்களில் இரண்டாவது சீசன் கடைபிடிக்கப்படுகிறது. இச்சமயங்களில் கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், தேனிலவு தம்பதியர்கள் வருகை புரிவதை காண முடியும். இந்த ஆண்டு கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாடு உள்ளிட்ட பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளா சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது. அதன் பின் அவ்வப்போது இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறை என 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர்.