நெல்லை, அக்.9: நாங்குநேரி தொகுதி மக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து பணியாற்றுவேன் என சிறுமளஞ்சியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் பேசினார். அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், நாங்குநேரி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுமளஞ்சி, அணைக்கரை, தளபதி சமுத்திரம் கீழுர், மேலூர், கண்டிகைப்பேரி, கீழ சண்முகபுரம், வேப்பங்குளம் மேலூர், கீழுர், ஆச்சியூர், இரணியன் குடியிருப்பு, ராஜாக்கமங்கலம், மாவடி, தோரண குறிச்சி, ஏமன்குளம், புதுக்குளம், தெற்கு விஜயநாராயணம், துவரம்பாடு, புதூர், ஐந்தாங்கால், ஆண்டான்குளம், திருவரங்கநேரி, இட்டமொழி உள்ளிட்ட இடங்களில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘நான் இந்த மண்ணின் மைந்தராக உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து பணியாற்றுவேன். அதிமுக அரசு செய்த சாதனைகளை எண்ணிப் பார்த்து நீங்கள் வாக்களிக்க வேண்டும். கிராமங்களில் குடிமராமத்து பணிகளால் நீராதாரம் பேணப்பட்டு வருகிறது.’’ என்றார்.