ஒருதலை காதலால் விபரீதம் வாலிபர் விஷம் குடித்து சாவு

சின்னசேலம், அக். 9: சின்னசேலம் அருகே ஒருதலை காதலால் மனமுடைந்த பொறியியல் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சின்னசேலம் அருகே தொட்டியம் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் சேட்டு மனைவி மலையம்மாள்(44). இவரது மகன் சிவக்குமார்(25). பொறியியல் பட்டதாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் சிவக்குமாரை காதலிக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த சிவக்குமார் கடந்த 1ம் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த சிவக்குமாரை அவரது உறவினர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தாய் மலையம்மாள் கொடுத்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: