தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை

திண்டுக்கல், அக்.9: திண்டுக்கல் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொல்லப்பட்டார். திண்டுக்கல் அருகே பொன்மாந்துறை புதுப்பட்டி, கலிங்கு நகரை சேர்ந்தவர் ராமசாமி(55). கூலி வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை(40). இருவருக்கும் நேற்று மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த அண்ணாமலை, ராமசாமியின் தலையில் கல்லைப் போட்டு ஓடிவிட்டார். இதில் ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: