கூடலூர், அக். 9: கூடலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி கோத்தர் வயல். இங்கு வசிப்பவர்கள் ஜமால்(50). இவரது மனைவி ஊமைவா. இருவரும் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணி புரிகின்றனர். இவர்கள் தனது மகனின் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வெளியூர் சென்றனர். நேற்று காலை வீடு திரும்பினர். வீட்டின் அறைகளில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் பின்புற கதவை உடைத்து திருடர்கள் வீட்டுக்குள் புகுந்திருப்பது தெரியவந்தது. வீட்டில் இருந்த லேப்டாப், ரூ.2,500 திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கூடலூர் டிஎஸ்பி ஜெய்சிங் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். எஸ்ஐ பிரகாஷ் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர்