ஊட்டி, அக். 9: மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் நூற்றாண்டு பழைமை வாய்ந்த மலை ரயில் உலக பிரசித்தி பெற்றதாகும். யுனஸ்கோ அமைப்பு நீலகிரி மலைரயிலை பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்த மலை ரயிலில் பயணிக்க பிற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஞாயிற்றுகிழமை காலை 11.25க்கு ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சனி, ஞாயிற்றுகிழமைகளில் ஊட்டி-கேத்தி இடையே 3 முறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.