தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான விழிப்புணர்வு முகாம்

புளியங்குடி, அக். 4: வாசுதேவநல்லூர் தங்கப்பழம்  பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான விழிப்புணர்வு முகாம் நடந்தது. தங்கப்பழம் கல்வி குழும தாளாளர் முருகேசன் தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் தமிழ்வீரன் முன்னிலை வகித்தார். வாசுதேவநல்லூர் மருத்துவ அலுவலர் சாந்தி சரவணபாய் மற்றும் சங்கரன்கோவில் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் அகிலாண்டபாரதி தலைமையில் ஊழியர்கள் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ரத்த தானம் செய்தனர். இவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  முகாம் ஏற்பாடுகளை தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் குருபிரசாத், துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related Stories: