பிரபல சாராய வியாபாரி தடுப்புக்காவலில் கைது

திண்டிவனம், அக். 4:  திண்டிவனம் அருகே பிரபல சாராய வியாபாரியை தடுப்புக்காவலில் போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம்  மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சஞ்சீவிராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்த  செல்வராஜ் மகன் மணிகண்டன்(25). இவர் தொடர்ந்து அப்பகுதியில் சாராயம்  கடத்துவது, விற்பனை செய்வது போன்ற தொழிலில் ஈடுபட்டு வந்தார். போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தாலும் ஜாமீனில் வெளியே வரும் அவர் தொடர்ந்து  இச்செயலில் ஈடுபட்டுவந்தார். இவரது நடவடிக்கையை தடுக்கும் வகையில் எஸ்பி  ஜெயக்குமார், தடுப்புக்காவலில் கைது செய்ய விழுப்புரம் ஆட்சியருக்கு  பரிந்துரை செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் சுப்ரமணியன் அதற்கான  உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திண்டிவனம் போலீசார்  மணிகண்டனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: