திருப்பூர், அக். 2: மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாக பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சந்திரமோகனுக்கு தமிழக அரசின் சார்பில் உத்தமர் காந்தி விருது அறிவித்துள்ளனர். தமிழக அரசு சார்பில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாக பணிபுரியும் அதிகாரிகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் உத்தமர் காந்தி விருது அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 2020ம் ஆண்டிற்கான உத்தமர் காந்தி விருதுக்கு திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பதவியேற்றார்.