திருக்கோவிலூர், அக். 2: திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றின் கரையோர பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில் திருக்கோவிலூர் உதவி ஆய்வாளர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினிலாரியை மடக்கினர். அப்போது அதிலிருந்த ஒரு வாலிபர் தப்பியோடி விட்டார். டிரைவர் மட்டும் சிக்கினார். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் மினிலாரியை சோதனை செய்தனர்.