விருத்தாசலம், அக். 2: விருத்தாசலம் அருகே சூதாட்டம் மற்றும் மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முகாசபரூர் சிவன் கோயில் பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் ஆடிய அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் ரவிச்சந்திரன் (35), சாமியப்பா (58), கருப்பையன் (55) ஆகிய 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 ரூபாய் ரொக்கப்பணம்
மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.