ஆலங்குளம், அக். 2: தீபாவளியை முன்னிட்டு ஆலங்குளம் செல்வராணி ஜவுளி ஸ்டோரில் அனைவருக்குமான புதிய ரகங்கள், ஆடைகள் அறிமுக விற்பனை துவங்கியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆலங்குளம் செல்வராணி ஜவுளி ஸ்டோரில் அக்டோபர் 1 முதல் 7 வரை தினமும் அனைவருக்கும் ஏற்ற புதிய ரக ஆடைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதன்படி நேற்று கல்லூரி மாணவிகளுக்கான புதிய ஆடைகள் அறிமுகத்துடன் சிறப்பு விற்பனை துவங்கியது. இன்று (2ம் தேதி) தலை தீபாவளி கொண்டாடமாக புதுமண தம்பதிகளுக்கு பட்டு புடவை, ஆடைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நாளை (3ம் தேதி) குழந்தைகளுக்கான புதிய பேஷன் ஆடைகளும், 4ம் தேதி இளம் பெண்களுக்கான மாடல் சேலைகளும், 5ம் தேதி மேட்சிங் மேட்சிங் என குடும்பத்தினருக்கான ஆடைகளும் அறிமுகப்படுத்தப்படும்.