சாராய வியாபாரி கைது

திருக்கோவிலூர், அக். 1:   திருக்கோவிலூர் அருகே மலையரசன்குப்பம் பகுதியில் கண்டாச்சிபுரம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராஜமன்னார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொன்னமேடு கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் வளர்ந்த மணி என்கிற மணி (55) மலையரசன்குப்பம் ஏரிப்பகுதியில் சாராயம் விற்றுக் கொண்டிருந்தபோது, போலீசார் மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து மணி மீது வழக்கு பதிந்து கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: