நலத்திட்ட உதவி வழங்கல்

காளையார்கோவில், அக்.1:   ரோட்டரி கிளப் ஆப் காளையார்கோவில் சுப்ரீம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஷேக் சலீம்  தலைமை வகித்தார். மாவட்டத்தின் செயலாளர் சிதம்பரம், துணை ஆளுநர் அருள்செழியன், பட்டய தலைவர் ஆரோக்கியசாமி  முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் போஸ் வரவேற்றார். சங்க செயலாளர்  அருள்சாமி, செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார்.  காளையார்கோவில் யூனியன் அலுவலக செந்தில்குமார், கீழக்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஆரோக்கியசாமி ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. 10 பள்ளிகளுக்கு தலா 2 வீதம் குப்பை சேகரிக்கும் கூடை இலவசமாக வழங்கப்பட்டது. சங்க மாத இதழை இதழாசிரியர்  ஜான்சன் ஜெயக்குமார் முன்னிலையில் மாவட்ட ரோட்டரி சங்க செயலாளர் சிதம்பரம்  வெளியிட்டார். துணை ஆளுநர் அருள்செழியன்  பெற்றுக்கொண்டார். விழாவில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள், செயலர்கள், சங்க உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். சங்க செயலாளர் அருள்சாமி நன்றி கூறினார்.

 

Related Stories: