காடையாம்பட்டி, அக்.1:ஓமலூர் அருகே சேலம் எம்பி பார்த்திபன் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். காடையாம்பட்டி தாலுகா பண்ணப்பட்டி, கூகுட்டப்பட்டி பண்ணப்பட்டி, மாட்டுக்காரன்புதூர், மாரக்கவுண்டன்புதூர், காங்கியானூர், கூகுட்டப்பட்டி, தின்னப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் எம்பி பார்த்திபன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது, உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் சேர்மன் சின்ராஜ், ஒன்றிய துணை செயலாளர் சந்திரசேகரன், முன்னாள் கவுன்சிலர்கள் குருநாதன், தங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அறிவழகன், நகர செயலாளர் திருநாவுக்கரசு, நிர்வாகிகள் சேகர், கதிரவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.