காவலர்களை தாக்கிய வாலிபர் கைது

திண்டிவனம், செப். 30: திண்டிவனம் அடுத்த அகூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களை தாக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்ட காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளிமேடுபேட்டை காவல்நிலையத்தில் பட்டணம் கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் சந்திரசேகர் என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை உதவி ஆய்வாளர் மோகனமுத்து உத்தரவுப்படி சட்டம்- ஒழுங்கு பிரச்னை சம்பந்தமாக சந்திரசேகர் மற்றும் சிவாஜி ஆகிய இருவரையும் அனுப்பி வைத்துள்ளார். அதன்படி இருவரும் இருசக்கர வாகனத்தில் அகூர் கிராமத்திற்கு சென்றனர். அகூர் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சென்று கொண்டிருந்தபோது அதே ஊரை சேர்ந்த ஜெகநாதன் மகன் முருகன் (37) மற்றும் சின்னமுத்து மகன் வெங்கடேஷ் ஆகியோர் காவலர்களை அசிங்கமாக திட்டி, கையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து காவலர் சந்திரசேகர் வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் மோகனமுத்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தார். வெங்கடேஷை தேடி வருகின்றனர்.

Related Stories: