ரத்ததான முகாம்

அருப்புக்கோட்டை, செப். 26: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி நாட்டுநல பணித்திட்டம் கோபாலபுரம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நடத்தியது. கல்லூரி முதல்வர் பொறுப்பு இசக்கித்துரை துவக்கி வைத்தார்.  அரசு மருத்துவமனை ரத்தவங்கி மருத்துவர் அண்ணாத்துரை, துணை முதல்வர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர்.  முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ரத்ததானம் செய்தனர்.  ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் ராஜவேல், வேலவன், செந்திவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: