கிருஷ்ணகிரி, செப்.26: டைட்டன் நிறுவனம், அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷனுடன் இணைந்து அரசு பள்ளி மாணவர்களுக்காக `நடமாடும் அறிவியல் ஆய்வகங்களை’ அறிமுகம் செய்தது.
ஐந்தாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப் பிரிவுகளில் மேம்பட்ட மற்றும் அனுபவமிக்க கற்றல் அனுபவத்தை இந்த ஆய்வகங்கள் வழங்கும். கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் வேடிக்கையான ஈடுபாட்டுடன் கல்வி கற்கவும், கற்றலின் மதிப்பு குறித்த விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்தும். நடமாடும் அறிவியல் ஆய்வகத்தை, அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் மற்றும் டைட்டன் நிறுவனத்தின் பெருநிறுவன நிலைத்தன்மை தலைவருமான தர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர், கடந்த 20ம் தேதி கிருஷ்ணகிரியில் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.