லால்குடி, செப்.26: லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் ஊராட்சி மேலவாளை கிராமத்தில் தூர்வாரப்பட்ட குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லால்குடி ஒன்றியம் இடையாற்றுமங்கலம் ஊராட்சியில் மேலவாளை கிராமத்தில் பொதுமக்கள் பயன்படும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் செலவில் குளம் தூர்வாரப்பட்டது. இக்கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர் குழு சார்பில் குளத்தின் கரைகளில் மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் குளத்தின் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.