கலப்பு திருமண ஜோடிக்கு மிரட்டல் விடுத்த கும்பல்

சேலம், செப். 25: சேலத்தில் கலப்பு திருமண ஜோடியின் வீட்டு கதவை தட்டி கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் குறித்து, சிசிடிவி கேமராவை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அஸ்தம்பட்டி பிள்ளையார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன்(30). இவரும், பள்ளப்பட்டி அங்கம்மாள் காலனியை சேர்ந்த சிவகாமி(20) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 10 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி பாண்டிச்சேரிக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வெறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனிடையே, கடந்த 21ம்தேதி சேலம் திரும்பிய காதல் ஜோடியினர், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு சேலம் மாநகர போலீசில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், இரு குடும்பத்தினரையும் அழைத்து  எந்த பிரச்னையும் செய்யக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கடந்த 22ம்தேதி அஸ்தம்பட்டியில் உள்ள சுரேந்திரன் வீட்டிற்கு பைக்கில் வந்த 2 பேர், வீட்டின் முதல் தளத்தில் இருந்த சுரேந்திரனின் பெற்றோரை மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் சுரேந்திரன் வீட்டு முன்பு சிறிது நேரம் நின்று பேசியதாகவும், அதன் பிறகு ஒருவர் சுரேந்திரன் வீட்டிற்குசென்று கதவை தட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.      இது குறித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: