வானூர், செப். 25: வானூர் தாலுகா மொரட்டாண்டி புறவழிச்சாலையில் அரசு பேருந்துகள் இயங்குவதால் பயணிகள் பாதிக்கப்படுகிறன்றனர். சென்னை, திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்துகள், விரைவுப்பேருந்துகள் புதுச்சேரியிலிருந்து திண்டிவனம், சென்னை நோக்கி செல்லும் பேருந்துகள் பெரும்பாலும் திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு வழியாக புதுச்சேரி செல்லாமல் மொரட்டாண்டி- இரும்பை புறவழிச்சாலை வழியாக செல்கின்றன. இதனால் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் அலைகழிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் இறக்கிவிட்டு செல்கின்றனர்.