சீர்காழி, செப். 25:நாகை மாவட்டம் சீர்காழி நகர் மற்றும் கிராமப்புற ரேஷன் கடைகளில் தொடர்ந்து பல மாதங்களாக பச்சரிசி வழங்காமல் புழுங்கல் அரிசி மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ரேஷன் கடைகளில் பச்சரிசி வழங்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில். சீர்காழி சன்னதி தெருவை சேர்ந்த கணேசன் (76) என்ற முதியவர் 24-ம் தேதி காலை 12 மணிக்கு சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலரிடம் ரேஷன் கடைகளில் பச்சரிசி வழங்குவதில்லை என புகார் அளித்தார். பின்பு அங்கிருந்த அலுவலக ஊழியரிடம் வாக்குவாதம் செய்து சீர்காழி அதிகாரிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் கடுமையாக திட்டினார். பிறகு அவரிடம் நாம் பேசிய போது,“நான் பச்சரிசி மட்டுமே சாப்பிடுவேன், புழுங்கல் அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடல் பாதிக்கப்பட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி செல்ல வேண்டியுள்ளது.