நல்லாசிரியர் விருது பெற்ற நாளந்தா மெட்ரிக் பள்ளி முதல்வருக்கு பாராட்டு

கிருஷ்ணகிரி, செப்.24: தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கிருஷ்ணகிரி நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வருக்கு பாராட்டு விழா நடந்தது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், கடந்த 5ம் தேதி தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கிருஷ்ணகிரி நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பார்வதிக்கு, நல்லாசிரியர் விருதினை வழங்கி கெளரவித்தார். நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி முதல்வர் பார்வதிக்கு, நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு நாளந்தா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் வக்கீல் கவுதமன் தலைமை வகித்து, முதல்வர் பார்வதிக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிறுவனர் ஆடிட்டர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், நிர்வாக இயக்குநர் டாக்டர் புவியரசன் ஆகியோருடன், ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Related Stories: