மயிலாடுதுறை, செப்.24: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கோமல் பகுதியில் அரசு மதுபானக்கடை உள்ளது. இக்கடையில் மேர்பார்வையாளராக பணியாற்றிவருபவர் அம்பல் ரமேஷ்(41). இவர் நேற்றுமுன்தினம் இரவு கடையில் பணியில் இருந்தபோது கோமல் கள்ளிமேடு கணேசன் மகன் பாலு என்பவரும் அதே பகுதியை சேர்ந்த மாதவன் என்பவரும் சென்று ஓசியில் மதுபாட்டில்கள் கேட்டுள்ளனர். அதற்கு மேர்பார்வையாளர் தர மறுத்துள்ளார்.