×

தாசில்தாராக நியமித்தால் 6 மாதத்தில் லஞ்சத்ைத ஒழிப்பேன்: கலெக்டரிடம் இளைஞர் மனு

தொண்டி, செப்.19:  மங்கலக்குடியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் திருவாடானை தாலுகா அலுவலகம் மற்றும் அரசு அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதால், தன்னை 6 மாதத்திற்கு தாசில்தாராக நியக்க கலெக்டரிடம் இளைஞர் மனு கொடுத்தார்.
தொண்டி அருகே உள்ள மங்கலக்குடியில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. அப்போது மனு கொடுத்த கீழகுடியை சேர்ந்த வினோகர் என்ற இளைஞர் கலெக்டரிடம் அளித்த மனுவில்,
‘‘மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்களில லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக திருவாடானை தாலுகாவில் அதிகமாக காணப்படுகிறது. பாமர மக்கள் தங்கள் தேவைக்காக சான்றிதழ்கள் பெற அலுவலகங்கள் செல்லம் போது தரக்குறைவாக பேசுகின்றனர். மேலும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமான தொகையை லஞ்சமாக கேட்கின்றனர். அதனால் என்னை திருவாடானை தாசில்தாராக 6 மாதத்திற்கு நியமனம் செய்தால் லஞ்சத்தை ஒழிப்பேன்’’ என்று கூறியிருந்தார்.

Tags : Dasildar ,Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...