அவிநாசி, செப்.19: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி உற்பத்தியாளர் சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும் இங்கு தென்னை மற்றும் பனங்கருப்பட்டிகளை விவசாயிகள் ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று நடந்த ஏலத்துக்கு 4 ஆயிரம் கிலோ தென்னங்கருப்பட்டி வந்தன. தென்னங்கருப்பட்டி கிலோ ஒன்றுக்கு ரூ.90.60 வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 62 ஆயிரத்து 400க்கு ஏலம் போனது.பனங்கருப்பட்டி வரத்து இல்லை. இந்த தகவலை கூட்டுறவு விற்பனை சம்மேளன மேலாண்மை இயக்குனர் மருதமுத்து தெரிவித்தார்.