சங்கரன்கோவில், செப். 19: விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் வட்டம் டி.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் நாகராஜ் (33). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. குடிப்பழக்கமும் இருந்து வந்தது. நாகராஜிக்கும், இதே ஊரை சேர்ந்த மாரிதாஸ் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் நாகராஜிக்கு குடும்பத்தினர் திருமணம் நிச்சயம் செய்தனர். இதனால் கள்ளக்காதலியிடம் இருந்து தன்னை பிரித்து விடுவார்களோ என கவலையடைந்த நாகராஜ், ஐஸ்வர்யாவை அழைத்து கொண்டு சங்கரன்கோவில் வந்துள்ளார். பின்னர் அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.