×

கால்நடை மருத்துவமனை திறக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், செப். 11: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள திருப்பாலைக்குடியில் நிரந்தரமாக கால்நடை மருத்துவமனை திறக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியான திருப்பாலைக்குடியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கான ஆடு, மாடு போன்ற கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் அதற்கு மருத்துவம் பார்க்க உப்பூர், அல்லது சோழந்தூர் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது.திருப்பாலைக்குடியில் நிரந்தரமாக ஒரு கால்நடை மருத்துவமனை இல்லாமல் கால்நடை வளர்ப்போர் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் திருப்பாலைக்குடி, பழங்கோட்டை பால்குளம், சம்பை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் நலன் கருதி விரைவில் நிரந்தரமாக ஒரு கால்நடை மருத்துவமனையை அமைத்து உரிய மருத்துவரை நியமனம் செய்ய வேண்டும் என கிராமப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : clinic ,
× RELATED  ராமகிருஷ்ணா பல் மருத்துவ...